குடை எச்சரிக்கை! இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை சந்திக்க வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்னிந்தியப் பகுதிகளிலும் ஒரு கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இந்த வானிலை மாற்றங்களின் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இன்று, தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும், நாளை அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையின்படி, இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *